புதுடில்லி: மேலும் 18 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. வரும் மே 3 ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என இன்று(ஏப்.,14) பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அளித்த உரையில் அறிவித்தார்.
முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 24ம் தேதி இரவில் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்தார். இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 21 நாள் ஊரடங்கு இன்று இரவுடன் முடிவடைகிறது.
மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு: மோடி